உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரு காதலிகள் திருமணம் செய்ய வலியுறுத்தல் : காதலன் தற்கொலை

இரு காதலிகள் திருமணம் செய்ய வலியுறுத்தல் : காதலன் தற்கொலை

காரைக்கால்: காரைக்கால் நெடுங்காடு அண்டூர் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் விஜய், 30; லாரி டிரைவர். இவர் வேலைக்கு செல்லும் போது ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.பின்னர் பஸ் ஒட்டும் போது வேறு ஒருபெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர்.இதனால் மனகுழப்பத்தில் இருந்த விஜய் நேற்று முன்தினம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர் அப்பகுதி ஆற்றுப்படுகையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு மருந்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வரும் வழியில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ