குழந்ைத இல்லா ஏக்கம் தொழிலாளி தற்கொலை
காரைக்கால்: குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால் நெடுங்காடு மேலபொன்பேத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரவி,56; கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த ஏக்கத்தில் ரவி மதுவிற்கு அடிமையானார். தொடர் சிகச்சை பெற்று வந்த நிலையில், ரவி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.