| ADDED : மார் 04, 2024 05:46 AM
ஆக்கிரமிப்பால் இடையூறு
வில்லியனுார் மார்கெட் வீதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.மேகா, வில்லியனுார். குப்பையால் துர்நாற்றம்
லாஸ்பேட்டை குமரன் நகர் 5வது குறுக்குதெருவில், குப்பைகள் கொட்டப்படுவதால்,துர்நாற்றம் வீசி வருகிறது.சீத்தாலட்சுமி, லாஸ்பேட்டை. குப்பை வண்டியால் இடையூறு
சாரம் வெங்கடேஸ்வரா நகரில் குப்பை வண்டிகளை சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்திற்கு இடையூராக உள்ளதுவசந்தி, சாரம். மரத்தை அகற்றவேண்டும்
தேங்காய்த்திட்டு ஐய்யனார் கோவில் வீதியில் மரங்கள் சாய்ந்து இருப்பதால் விபத்துகள்நடப்பதற்குள், வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுப்பிரமணி, தேங்காய்த்திட்டு.