16 இடங்களில் புகார்: காங்., அப்செட்
பார்லிமெண்ட் எதிர்கட்சி தலைவர் ராகுல் தீவிரவாதி எனவும், கொலை செய்யப்படுவார் என பேசிய பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டி, நேற்று முன்தினம் புதுச்சேரியில் காங்., கட்சியினர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில், 16 போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் மனு கொடுத்தனர். ஆனால், ஒரு ஸ்டேஷன்களில் கூட வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதனால், புகார் அளித்த காங்., கட்சியினர் 'அப்செட்' ஆகியுள்ளனர்.