உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திருக்கனுார், \கொடுக்கூர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான கொடுக்கூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு மகா கணபதி, முருகன், கெங்கையம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி