| ADDED : மார் 06, 2024 03:14 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 9ம் தேதி நடக்க உள்ளதாக மாவட்ட நீதிபதி அம்பிகா தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் வரும் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றம், புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் நடக்க உள்ளது.தேசிய மக்கள் நீதிமன்றத்தில், சமாதானமாகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து நஷ்ட ஈடு, கணவன் - மனைவி பிரச்னை, குடும்ப நீதிமன்றம், ஜீவனாம்சம், உரிமையியில், சிவில், வங்கிக் கடன் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது.வழக்குகளை, சமாதான முறையில், தீர்த்துக்கொள்ள விரும்பும் வழக்காடிகள் வழக்கு நடக்கும் நீதிமன்றத்தை வழக்கறிஞருடன் அணுகி நீதிமன்றம் மூலம், தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு, பரிந்துரைக்குமாறு விண்ணப்பித்து, தங்கள் வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மூலம் தீர்வு பெற்று பயன் அடையலாம்.