மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
3 hour(s) ago
புதுச்சேரி : த்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவையின் 20ம் பாசுரம் குறித்து நேற்று உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையில், நப்பின்னை பிராட்டியை துயிலெழுப்பும் 18, 19, 20 ஆகிய மூன்று பாசுரங்களில் இப்பாசுரமே கடைசிப் பாசுரம். 17வது பாசுரம் அம்பரமே தண்ணீரே என்று அகாரத்திலும், 18வது பாசுரம் உந்து மதகளிற்றன் என்று உகாரத்திலும், இன்றைய 20வது பாசுரம் முப்பத்து மூவர் என்று மகாரத்திலும் துவங்குகிறது. 17, 18, 20 ஆகிய பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் மூன்றும் சேர்ந்து அ + உ + ம என்றாகி, வேத சாரமான ஓம் என்ற பிரணவமாகிறது.தமிழின் சிறப்பும், ஆண்டாளின் கவித்திறமையும் ஓங்கி விளங்கும் பாசுரங்களில் இதுவும் ஒன்று. ஆண்டாள் தமிழையும் ஆண்டாள்.நம்மையும் ஆண்டாள்.இப்பாசுரத்தில் முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று என்று தேவர்களைப் பற்றி ஆண்டாள் ஏன் பேச வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும்.தேவர்களுக்கு, அமுதம் வேண்டும், தேவலோகப் பதவி வேண்டும், பலம் வேண்டும், ஆனால் எங்களுக்கோ உன்னையன்றி வேறு எதுவும் வேண்டாம் என்றும் உன் அருளால் தேவர்களோ சாகாவரம் பெற்று விட்டனர்.ஆனால் நாங்களோ நின்னருள் வேண்டி இப்பூவுலகில் உழன்று கொண்டிருப்பதைக் காண வேண்டும், எங்கள் துயர் போக்குவாய் என்று ஆண்டாள் நாச்சியார் கண்ணனிடம் நப்பின்னையை முன்னிறுத்திச் சொல்கின்றாள்.இப்பாசுரத்தில் உக்கம் என்றால் விசிறி. தட்டொளி என்றால் கண்ணாடி. விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும் வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து. நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக் கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை உக்கமும் தட்டொளியும் என்ற பாசுரச் சொற்கள் விளக்குகின்றன. வைணவ சித்தாந்தப்படி, தாயார் கருணை இல்லாமல் பரமனை அடைய முடியாது என்ற தத்துவச் செய்தியை ஆண்டாள் இப்பாசுரத்தில் சொல்கிறாள். இவ்வாறு உபன்யாசம் செய்தார்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago