உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதியவர் சாவு போலீசார் விசாரணை

முதியவர் சாவு போலீசார் விசாரணை

திருக்கனுார் : திருக்கனுார் சாராயக்கடை அருகே இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருக்கனுார் டி.வி.மலை ரோட்டில் உள்ள சாராயக்கடை அருகே 75 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் திருக்கனுார் காவல் நிலையத்தின் 0413-2688435 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ