| ADDED : டிச 25, 2025 05:10 AM
புதுச்சேரி: வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாமினை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் கேட்டுக்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2026 நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில், தங்களுடைய பெயர்களை சேர்தல், நீக்கல், மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் வரும் 27 மற்றும் 28 மற்றும் வரும் ஜனவரி மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், புதுச்சேரியில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடியில் வேலை நேரங்களில் நடக்கிறது. அங்கு, வாக்குச்சாவடி அதிகாரிகளால் பெயர் சேர்தல், நீக்கல், மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் பெறப்படும். இந்த அறிய வாய்ப்பினை புதுச்சேரி மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.