உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

புதுச்சேரி: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உள்ள மங்கள வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.புதுச்சேரி, வில்லியனூர் காசியிலும் வீசம்பெற்ற திருக்காஞ்சி, காமாட்சி, மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மங்கள வராகி அம்மனுக்கு நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு தேய்பிறை தை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, மங்கள வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ