உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்கள் பிரதிநிதி ஆக வேண்டும் தமிழிசை விருப்பம்

மக்கள் பிரதிநிதி ஆக வேண்டும் தமிழிசை விருப்பம்

புதுச்சேரி:புதுச்சேரி கவர்னராக தமிழிசை பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் அளித்த பேட்டி:தற்போது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது. நான் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன் என்றோ, அதிலும் புதுச்சேரியில் போட்டியிடுவேன் என்றோ வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி