மேலும் செய்திகள்
கந்த சஷ்டி விழா வரும் 2ல் துவக்கம்
31-Oct-2024
புதுச்சேரி: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு, 10ம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா மற்றும் 11ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நாளை துவங்குகிறது. இதையொட்டி, காலை 9:05 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் காப்பு கட்டுதல், மகா தீபாராதனை நடக்கிறது. 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு சம்ஹார வேல் அபிஷேகம், 4ம் தேதி சூரபதுமன் திக் விஜயம், 5ம் தேதி முருகபெருமான் சிவபூஜை செய்தல், 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு மற்றும் இரவு 8:00 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 7ம் தேதி மதியம் 2:30 மணிக்கு நவ வீரர்கள் ஊர்வலம், மாலை 4:30 மணிக்கு கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் நடக்கிறது. 8ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
31-Oct-2024