உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

மயங்கி விழுந்து இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

புதுச்சேரி: கடற்கரையில் மயங்கி விழுந்து இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த 18ம் தேதி இரவு 8:45 மணிக்கு, 55 வயது மதிக்க தக்க நபர் மயங்கி கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதித்து வரும் வழியிலே இறந்து விட்டதை உறுதி செய்தார். இறந்தவர் யார் மற்றும் முகவரி தெரியவில்லை. பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து மயங்கி விழுந்து இறந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால் 0413-2228067 என்ற எண்ணில் தெரிவிக்க போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ