உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆராய்ச்சி துறை, தீயணைப்பு துறை பணிகளுக்கு 29ம் தேதி எழுத்து தேர்வு

ஆராய்ச்சி துறை, தீயணைப்பு துறை பணிகளுக்கு 29ம் தேதி எழுத்து தேர்வு

புதுச்சேரி: திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறையின் ஆய்வாளர், தீயணைப்பு துறை நிலைய அதிகாரி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி, திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வரும் 29ம் தேதி காலை புதுச்சேரியில் 10 தேர்வு மையங்களில் நடக்கிறது. இதேபோல், தீயணைப்பு துறையின் நிலைய அதிகாரி பணியிடத்திற்கான எழுத்து தேர்வு 29ம் தேதி மதியம், புதுச்சேரியில் 2 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை https://recruitment.py.gov.inஎனும் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்கள், உதவி தேவைப்பட்டால் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை