உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்

பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்

செங்டு: உபர் கோப்பை பாட்மின்டனில் இந்திய அணி 0-5 என சீனாவிடம் தோல்வியடைந்தது. சீனாவில் 33வது தாமஸ் கோப்பை (ஆண்கள்), 30வது உபர் கோப்பை (பெண்கள்) பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இந்திய பெண்கள் அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் கனடா, சிங்கப்பூரை வீழ்த்திய இந்திய அணி, காலிறுதிக்கு முன்னேறியது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில் சீனாவுடன் மோதியது. ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் இஷாராணி 12-21, 10-21 என சீனாவின் வெய் செனிடம் தோல்வியடைந்தார். இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் பிரியா-ஸ்ருதி ஜோடி 13---21, 12-21 என சீனாவின் ஷென் ஷென், பன் ஜியா ஜோடியிடம் தோற்றது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீனாவின் யூ ஹான் மோதினர். இதில் அன்மோல் 9-21, 1-4 என பின்தங்கி இருந்த போது காயம் காரணமாக விலக, ஹான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சிம்ரன் சிங், ரித்திகா ஜோடி 9-21, 10-21 என சீனாவின் நிங் டன், ஷெங் ஷு ஜோடியிடம் வீழ்ந்தது. கடைசி, ஒற்றையர் பிரிவு மூன்றாவது போட்டியில் இந்தியாவின் தான்வி, 7-21, 16-21 என ஜி வாங்கிடம் தோல்வியடைந்தார். முடிவில் இந்திய அணி 0-5 என தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை