உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / 31 பந்தில் உர்வில் சதம் * தமிழக அணி ஏமாற்றம்

31 பந்தில் உர்வில் சதம் * தமிழக அணி ஏமாற்றம்

ஐதராபாத்: இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடர் நேற்று துவங்கியது. ஐதராபாத்தில் நடந்த போட்டியில் குஜராத், சர்வீசஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சர்வீசஸ் அணி 20 ஓவரில் 182/9 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கேப்டனாக களமிறங்கிய உர்வில் படேல், 31 பந்தில் சதம் அடிக்க வெற்றி எளிதானது. குஜராத் அணி 12.3 ஓவரில் 183/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. உர்வில் (37 பந்து, 119 ரன்) அவுட்டாகாமல் இருந்தார்.தமிழகம் தோல்விஆமதாபாத்தில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் மோதின. தமிழக அணிக்கு ஜெகதீசன் (29), சோனு (43) கைகொடுக்க, 20 ஓவரில் 169/8 ரன் எடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு தீபக் ஹூடா (36 பந்து, 76 ரன்) உதவ, 16.3 ஓவரில் 170/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் உத்தரகாண்ட் (197/5) அணி இலக்கை துரத்தியது கர்நாடகா. கடைசி 2 பந்தில் 7 ரன் தேவை என்ற நிலையில், பிரவீன் துபே (38 ரன்) சிக்சர் அடிக்க, கர்நாடக அணி (198/5) 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது. லக்னோவில் நடந்த போட்டியில் மும்பை, ரயில்வேஸ் மோதின. ரயில்வேஸ் (158/5) இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு சூர்யகுமார் (47), ரகானே (62) கைகொடுக்க, 15.5 ஓவரில், 159/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ