| ADDED : பிப் 22, 2024 09:56 PM
கோவை: ரஞ்சி கோப்பை காலிறுதியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் முதல்தர ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. கோவையில் இன்று துவங்கும் காலிறுதியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன.லீக் சுற்றில் விளையாடிய 7 போட்டியில், 4 வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி என 28 புள்ளிகளுடன் 'சி' பிரிவில் முதலிடம் பிடித்த தமிழக அணி 7 ஆண்டுகளுக்கு பின் காலிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் நாராயண் ஜெகதீசன் (775 ரன், 2 சதம்), பாபா இந்திரஜித் (606 ரன், 2 சதம்), பிரதோஷ் ரஞ்சன் பால் (436 ரன், ஒரு சதம்) நம்பிக்கை அளிக்கின்றனர். பவுலிங்கில் சாய் கிஷோர் (38 விக்கெட்), அஜித் ராம் (36), சந்தீப் வாரியர் (18) பலம் சேர்க்கின்றனர்.சவுராஷ்டிரா அணி லீக் சுற்றில் பங்கேற்ற 7 போட்டியில், 4 வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி என 29 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. பேட்டிங்கில் 'டெஸ்ட் ஸ்பெஷலில்ஸ்ட்' புஜாரா (780 ரன், 3 சதம்), கேப்டன் அர்பித் வசவடா (440), பிரேர்க் மன்கட் (426) கைகொடுக்கின்றனர். பவுலிங்கில் தேர்மேந்திரசின் ஜடேஜா (39 விக்கெட்) நம்பிக்கை தருகிறார்.சொந்த மண்ணில் தமிழக வீரர்கள் அசத்தும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறலாம்.