உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் இணைப்புக்கு லஞ்சம் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

மின் இணைப்புக்கு லஞ்சம் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மேலமையூர் லட்சுமி நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவர், 2009ம் ஆண்டு, மே மாதம் 22ம் தேதி, தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு மும்முனை இணைப்பு பெற, செங்கல்பட்டு மின் வாரிய அலுவலக வணிக உதவியாளர் சரவணன், 48, என்பவரை அணுகினார்.அப்போது, மின் இணைப்பு வழங்க, சரவணன் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.அதன்பின், லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை, நடராஜனிடம் கொடுத்து அனுப்பினர். நடராஜன் பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சரவணனை மடக்கிப் பிடித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சரவணனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை