உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெடுங்குன்றத்தில் தொடரும் மின்தடையால் அவஸ்தை

நெடுங்குன்றத்தில் தொடரும் மின்தடையால் அவஸ்தை

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி அம்பேத்கர் நகர், முத்தமிழ் நகர் மற்றும் கொளப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சில நாட்களாக, தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது.இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி