உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இல்லீடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

இல்லீடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு:இல்லீடு கிராமத்தில், மனுநீதி நாள் முகாம் இன்று நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, செய்யூர் தாலுகா, செய்யூர் குறுவட்டத்தில் உள்ள இல்லீடு கிராமத்தில், மனுநீதி நாள் முகாம், இன்று 11ம் தேதி, புதன் கிழமை காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடக்கிறது.இம்முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ