உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ம.பி., குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

ம.பி., குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

சென்னை,மத்திய பிரதேசம் மாநிலம், இந்துாரை சேர்ந்தவர்நாகர்ஜுனா ரெட்டி, 40. இவர் மீது பணமோசடிஉள்ளிட்ட வழக்கு தொடர்பாக, அம்மாநில போலீசார் தேடி வந்தனர்.தேடப்படும் குற்றவாளியாக இந்துார் போலீசார் அறிவித்தனர். இந்த விபரம் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.இதற்கிடையே, நேற்று அதிகாலை சென்னையில் இருந்து துபாய்க்கு விமானத்தில் செல்ல நாகர்ஜுனா ரெட்டி வந்திருந்தார். அவரது ஆவணங்களை சரிபார்த்தபோது, தேடப்படும் குற்றவாளி நாகர்ஜுனா ரெட்டி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பிடித்து, சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்துார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை