மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
7 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
7 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
7 hour(s) ago
செங்கல்பட்டு:இந்திய ராணுவத்தில் அக்னிவீர் வாயு பிரிவில் இசைக்கலைஞர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்திய ராணுவத்தில், 'அக்னி வீர்' வாயு பிரிவில், இசை கலைஞர் பணிக்கான தேர்வுக்கு பெங்களூருவில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தின் வாயிலாக, வரும் ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை, ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க, மே 22ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை, https:agnipathvayu.cdac.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago