உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சமுதாய கூடத்தை புதுப்பிக்க ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு

சமுதாய கூடத்தை புதுப்பிக்க ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு

திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சியில், 1998 -99ம் நிதியாண்டில், திருப்போரூர் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பேரூராட்சி பொதுநிதியின் கீழ், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது.இதில், திருப்போரூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தண்டலம், ஆலத்துார், சிறுதாவூர் உள்ளிட்ட கிராம மக்கள், திருமணம், சங்கக் கூட்டம் என, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.தற்போது, வர்ண பூச்சு உதிர்ந்து பொலிவின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து மேம்படுத்த, 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை