உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு:அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தொழிற்கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனம், தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவியரில், 2024- 25ம் ஆண்டு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணாக்கர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லுாரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி (https;//umistn,gov,in.officer) என்ற இணையதளத்தின் மூலம், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை