மாவட்ட அளவிலான செஸ்: கோகுலம் பள்ளி மாணவி முதலிடம்
செங்கல்பட்டு : நென்மேலி ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளி மாணவி, செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகி உள்ளார்.செங்கல்பட்டு சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவில், செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, செங்கல்பட்டில் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர்.இந்த போட்டியில், செங்கல்பட்டு அடுத்த, நென்மேலி கோகுலம் பொதுப்பள்ளி மாணவி எஸ்.ஆர்.மிருளாளினி, 13 வயது பிரிவில், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்றார்.இவர், மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இவருக்கு, பாராட்டு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி மிருளாளினிக்கு, பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.