உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இங்கிலாந்து மூதாட்டி கடலில் மூழ்கி உயிரிழப்பு

இங்கிலாந்து மூதாட்டி கடலில் மூழ்கி உயிரிழப்பு

மாமல்லபுரம், : இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரியான் டெய்லர் மனைவி பிரிட்கெட் டெய்லர், 84. மசாஜ் தெரபிஸ்ட். இவர், தன் மகன் ரூபெர்ட் டெய்லர், 58, என்பவருடன், கடந்த பிப்., 6ம் தேதி, மாமல்லபுரம் வந்தார்.இங்குள்ள தனியார் விடுதியில் தங்கி, சிற்பங்களை ரசித்தனர். நேற்று பகல் 1:00 மணிக்கு, ஒற்றைவாடைத் தெரு பகுதி கடலில், அவர்கள் குளித்தனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி, பிரிட்கெட் டெய்லர் நீரில் மூழ்கினார்.அப்பகுதி மீனவர்கள் கடலில் அரை மணி நேரம் தேடி, அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.மாமல்லபுரம் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, இங்கிலாந்து துாதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாயின் உடலை இந்தியாவிலேயே எரியூட்டி, சாம்பலை தன் தாய் நாட்டிற்கு கொண்டுசெல்ல விரும்புவதாக, மூதாட்டியின் மகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி