உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வருவாய் கோட்டங்களில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடக்கிறது.கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன் தலைமையில், வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.இதேபோன்று, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், மாலை 3:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை