மேலும் செய்திகள்
சாத்துாரில் சேதமடைந்த வேளாண் அலுவலக கட்டடம்
31-Jan-2025
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே பாலுார் கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.குடியிருப்புகளுக்கு நடுவே, நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.இதில், 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.நியாய விலைக் கடை, 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.முறையான பராமரிப்பு இல்லாமல், கட்டடம் நாளடைவில் பழுதடைந்து, சுவர் மற்றும் மேல்தளத்தில் உள்ள சிமென்ட் பூச்சு உதிர்ந்து உள்ளது.இதனால், மழைக் காலத்தில் மேல் தளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் தண்ணீரில் நனைந்து சேதமடைவதாக கூறப்படுகிறது.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள நியாய விலைக் கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
31-Jan-2025