உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் நகராட்சி குடிநீர் கிணறு திறந்த நிலையில் சீரழியும் அவலம்

மதுராந்தகம் நகராட்சி குடிநீர் கிணறு திறந்த நிலையில் சீரழியும் அவலம்

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட மாம்பாக்கம், புதுமாம்பாக்கம் பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்களுக்கு, குடிநீர் கிணற்றில் இருந்து மோட்டார் வாயிலாக நீர் கொண்டு வரப்பட்டு, மாம்பக்கம் பகுதியில் நீர் சேமிப்பு கிணற்றில் சேமித்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தி, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த நீர் சேமிப்பு கிணற்றின் மீது இலை, தழைகள் விழாதவாறு அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, இரும்பு துகள்கள் கிணற்றில் விழுகின்றன.எனவே, கிணற்றில் முளைத்துள்ள செடிகளை அகற்றவும், கிணற்றின் மீது பாதுகாப்பான மூடி அமைக்கவும், அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை