உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 லட்சத்தில் குறிப்பேடுகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 லட்சத்தில் குறிப்பேடுகள்

கல்பாக்கம் : கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. நிலைய நிர்வாகம், சமூக பொறுப்பு திட்டத்தில், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச குறிப்பேடுகள் வழங்கி வருகிறது.தற்போது, 80 பள்ளிகளில் பயிலும், 85,200 மாணவ - மாணவியருக்கு, 29.30 லட்சம் ரூபாய் மதிப்பில், தரமான தாளில் தயாரிக்கப்பட்ட குறிப்பேடுகள், தலா ஐந்து வழங்குவதாக, அணு மின் நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்