உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

செங்கல்பட்டு:போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க, கடந்த 28 ஆண்டுகளாக, ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,522 மையங்களில், 2 லட்சத்து 36 ஆயிரத்து 231 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில், போலியோ சொட்டு மருந்து முகாம், நேற்று நடந்தது. வெளிமாநில பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, அவர்களுக்கும் 26 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணியில் அரசு டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி