உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சார்- பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு

சார்- பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி, கந்தசுவாமி கோவில் தெற்கு மாடவீதியில், சார்- - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. தமிழகத்திலேயே அதிக வருவாய் அளிக்கும் சார் - - பதிவாளர் அலுவலகமாக முதலிடத்தில் திருப்போரூர் இருந்தது. இதனால், பரபரப்புடன் காணப்பட்டு அடிக்கடி லஞ்ச ஒழிப்பு சோதனையும் நடந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசல் போன்ற பல்வேறு காரணங்களால், திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தை பிரிக்க, அரசு முடிவு செய்தது. அதன்படி, திருப்போரூர் சார்- - பதிவாளர் அலுவலகத்தை பிரித்து கேளம்பாக்கத்தில் கடந்த ஆக.,1 ம் தேதி முதல் புதிதாக செயல்பட்டு வருகிறது. திருப்போரூரில் இருந்த பரபரப்பு கேளம்பாக்கம் சார்- பதிவாளர் அலுவலகத்தில் திரும்பியது. கேளம்பாக்கம் சார்- பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலை டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை