மேலும் செய்திகள்
ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த பழைய குற்றவாளி கைது
16-Oct-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு முருகேச முதலியார் தெரு தண்ணீர் தொட்டி அருகில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று மாலை செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் செங்கல்பட்டு முருகேசனார் தெருவை சேர்ந்த ராஜா, 32, என்பதும், கூலி வேலை செய்து வந்த இவர், மதுவுக்கு அடிமையாகி சுற்றி வந்ததும் தெரியவந்தது.சில நாட்களாக, வீட்டிற்கு செல்லாமல், திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்தது தெரிய வந்தது. ராஜா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16-Oct-2024