உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மூலவர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்துக்கள் பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது.இது தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்களும் நடக்கின்றன.வழக்கமாக, காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 3:30 மணி முதல், இரவு 8:30 மணி வரையும் நடை திறக்கப்பட்டு சாத்தப்படும்.தற்போது, மார்கழி மாத பிறப்பையொட்டி, நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும், 16ம் தேதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி வரை, அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பின்னர் பகல் 12:00 மணிக்கு நடை சாத்தப்படும்.மீண்டும் மாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை