உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலர் மீது பேருந்து மோதி கணவன் கண்முன் மனைவி பலி

டூ - வீலர் மீது பேருந்து மோதி கணவன் கண்முன் மனைவி பலி

மதுராந்தகம்:சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து, 40. இவர் மனைவி சீதா, 35. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.நேற்று இரவு, மதுராந்தகம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு, ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் இருசக்கர வாகனத்தில், தம்பதி இருவரும் வந்துள்ளனர்.பின், விழா முடிந்து, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாமண்டூர் தனியார் பள்ளி அருகே சென்ற போது, விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து, எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரின் மீதும், பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதில், சீதா சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், படுகாயம் அடைந்த முத்துவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சீதா-வின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து, காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ