உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த, தண்டரை பகுதியைச் சேர்ந்த தனராஜ் மகன் சஞ்சீவ் செல்வகுமார், 45. பெயின்டரான இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை 5:00 மணிக்கு, பெரிய இரும்பேடு தரைப்பாலத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து, அவரது மனைவி கீதாமேரி, நேற்று அளித்த புகாரின்படி, திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை