மேலும் செய்திகள்
சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி
06-Sep-2024
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டையைச் சேர்ந்தவர் நடராஜ் என்கிற அஜித், 29. இவர், செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு, வேலைக்கு செல்வதற்காக, ஹீரோ ஹோண்டா ஷைன் இரு சக்கர வாகனத்தில், கக்கிலப்பேட்டை நோக்கி வந்துள்ளார்.அப்போது, கக்கிலப்பேட்டை பகுதியில், சென்னை மார்க்கத்தில் செல்வதற்காக, தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். எதிர்பாராதவிதமாக, திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற, வின் தனியார் சொகுசு பேருந்து, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக மோதியது.இதில், நடராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், நடராஜ் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று உடல் நடராஜின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின், வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
06-Sep-2024