உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போனில் பேசியபடி நடந்தவர் கல் குவாரியில் விழுந்து பலி

போனில் பேசியபடி நடந்தவர் கல் குவாரியில் விழுந்து பலி

குன்றத்துார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன், 25. தாம்பரம் அருகே எருமையூரில் தங்கி, அதே பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஜெயராமன், மொபைல் போனில் பேசியபடி, எருமையூர் கல்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது, தவறி விழுந்து 200 அடி நீர் நிரம்பிய குவாரி நீரில் மூழ்கினார்.தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், குவாரியில் இறங்கி 4 மணி நேரம் தேடி ஜெயராமனை மீட்டனர். சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை