உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., ௶மாஜி நிர்வாகிகள் வீடு மீது பாட்டில் தாக்குதல்

தி.மு.க., ௶மாஜி நிர்வாகிகள் வீடு மீது பாட்டில் தாக்குதல்

அடையாறு, அடையாறு பகுதியைச் சேர்ந்த, 173வது வார்டு தி.மு.க., வட்டச் செயலர் தனசேகர், 40. துணை வட்ட செயலர் துரைராஜ், 42. இருவரும், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். தேர்தல் பணி யார் தலைமையில் நடக்க வேண்டும் என்பதில், இவர்களுக்குள் போட்டி நிலவியது.துரைராஜ் ஆதரவாளர்களும், முன்னாள் வட்ட பிரதிநிதிகளுமான சிங்காரவேலன், 50, செல்வராஜ், 52, இருவரும், அடையாறு கெனால் பேங்க் சாலையில் வசிக்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு, இவ்விருவர் வீடுகளிலும், பீர் பாட்டில்கள் வீசி தாக்குதல் நடந்து உள்ளது.போலீசார் விசாரணையில், தனசேகரன் ஆதரவாளர்களான, தி.மு.க.,வைச் சேர்ந்த மவுலி, 28, ஹரிஹரன், 30, ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.மவுலியை பிடித்து விசாரித்த போது, அவர் 'தி.மு.க., நிர்வாகி' எனக் கூறி, போலீசார் பிடியிலிருந்து தப்பிச் சென்றார்.தாக்குதலுக்கு ஆளான நபர்கள் புகார் அளித்தால், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி