| ADDED : மார் 30, 2024 12:35 AM
சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதைகளின் மேம்பாட்டு பணி நடக்க உள்ளன. இதனால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரளா மாநிலம் ஆலப்புழா - ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத், கொச்சுவேலி - கோரக்பூர் விரைவு ரயில்கள், வரும் 2ம் தேதி பெரம்பூர் வழியாக மாற்றி இயக்கப்படும் மத்திய பிரதேச மாநிலம் இந்துார் - கொச்சுவேலி, தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில்கள் வரும் 1ம் தேதி பெரம்பூர் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சென்னை சென்ட்ரல், கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் மெயில் விரைவு ரயில்கள் வரும் 2ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மெயில் விரைவு ரயில் வரும் 2ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா - சென்னை சென்ட்ரல் இரவு 11:55 மணி மெயில் ரயில் வரும் 1ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் சாலிமார் கோரமண்டல விரைவு ரயில் வரும் 3ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு விரைவு ரயில் வரும் 2ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் வரும் 2ம் தேதி திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.