உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை, ஆக. 22--சென்னையில் உள்ள அனைத்து அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன.கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., - டிப்ளமா, பட்டப்படிப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். முகாமில், 20க்கு மேற்பட்ட தனியார் துறையின் நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். பங்கேற்க கட்டணம் கிடையாது.பங்கேற்க விரும்புவோர், அரசின் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை