உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடன் வாங்கி ஏமாற்றியதாக மிரட்டி ரூ.64,000 பறிப்பு

கடன் வாங்கி ஏமாற்றியதாக மிரட்டி ரூ.64,000 பறிப்பு

எம்.ஜி.ஆர்.நகர், ஜாபர்கான்பேட்டை, பாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு, 52. இவர், 'தரணி' என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 1ம் தேதி மதியம், அவரது மொபைல் போன் எண்ணிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் சி.பி.ஐ., அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.பின், 'டில்லியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இருந்து, முகமது வாசிம் என்பவருக்கு 25 லட்சம் ரூபாய் லோன் வாங்கி கொடுத்து ஏமாற்றி உள்ளீர்கள்; அதனால், உச்ச நீதிமன்றத்தில் இருந்து கைது செய்ய 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது' என கூறியுள்ளார். தொடர்ந்து ரமேஷ்பாபுவை மிரட்டி, அவரது வங்கி கணக்கில் இருந்து, எட்டு தவணைகளாக 8,000 ரூபாயாக 64,000 ரூபாய் பறித்து உள்ளார்.இது குறித்து, தி.நகர் துணை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை