உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோ - கோ, வாலிபால் போட்டி கோல சரஸ்வதி பள்ளி அபாரம்

கோ - கோ, வாலிபால் போட்டி கோல சரஸ்வதி பள்ளி அபாரம்

சென்னை, பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில், கோ - கோ மற்றும் வாலிபாலில், கோல சரஸ்வதி பள்ளி அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் கோல சரஸ்வதி வைணவ மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, பள்ளிளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன.இதில் தடகளம், வாலிபால், கால்பந்து, கோ - கோ, பேட்மின்டன் உட்பட மொத்தம், 10 விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. போட்டிகள் கீழ்ப்பாக்கம், கோல சரஸ்வதி வைணவ மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரி, நேரு பூங்கா விளையாட்டுத் திடல் ஆகிய இடங்களில் நடக்கின்றன.நேற்று துவங்கிய வாலிபால் போட்டியில், ஆண்களில் கோல பெருமாள் பள்ளி, பெண்களில் கோல சரஸ்வதி பள்ளி அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.அதேபோல் கால்பந்தில், இருபாலரிலும் கீழ்ப்பாக்கம் பவன்ஸ் பள்ளி காலிறுதிக்கு தகுதி பெற்றது. கோ - கோ போட்டியில் மாணவியரில், கோல சரஸ்வதி பள்ளி காலிறுதிக்குள் நுழைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ