உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லியில் குதிரை தொல்லை

பூந்தமல்லியில் குதிரை தொல்லை

பூந்தமல்லி நகராட்சியின் 21வது வார்டில், 80,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், இங்கு குடியிருப்பு பகுதியில் 20க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித் திரிகின்றன. குடியிருப்பு பகுதி, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தில் சுற்றும் குதிரைகளால் மாணவர்கள், பொதுமக்கள் பீதியடைகின்றனர்.நெடுஞ்சாலையில் சுற்றும் குதிரைகளால், அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில் நடந்து செல்வோரையும் முட்ட வருகின்றன. சில நேரம், காலால் உதைப்பதால், பகுதிவாசிகள் காயமடைகின்றனர்.எனவே, பூந்தமல்லியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள குதிரைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சாந்திகிருஷ்ணா, 35, பூந்தமல்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ