உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மக்கள் கட்டிய கோவில் மண்டபத்திற்கு சொந்தம் கொண்டாடும் அறநிலைய துறை

மக்கள் கட்டிய கோவில் மண்டபத்திற்கு சொந்தம் கொண்டாடும் அறநிலைய துறை

அனகாபுத்துார், அனகாபுத்துாரில், பழமைவாய்ந்த ஆலவட்டம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், முகப்பு மண்டபம் கட்டப்பட்டு, சமீபத்தில் அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.இந்த முகப்பு மண்டபத்தில், அதற்கான கல்வெட்டு பதிக்கப்பட்டு உள்ளது. அதில், ஹிந்து அறநிலையத் துறையால் நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தில் முகப்பு மண்டபத்தை கட்டிவிட்டு, ஹிந்து அறநிலையத் துறையால் கட்டப்பட்டது போல் கல்வெட்டு பதிக்கப்பட்டதையும், அதில், ஊர் முக்கியஸ்தர்களின் பெயர் இடம் பெறாததை கண்டித்தும், அனைத்து கட்சி மற்றும் அனகாபுத்துார் பகுதிவாசிகள் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அனகாபுத்துார் நுாலகம் அருகே, செங்கல்பட்டு மாவட்ட தே.மு.தி.க., செயலர் முருகேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் பல்லாவரம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தன்சிங் உள்ளிட்ட அக்கட்சியினர் மற்றும் அப்பகுதிவாசிகள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ஆடி மாத திருவிழாவின் போது, பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மற்றும் பலரின் பொருள் உதவியால் கோவில் முகப்பு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.ஆனால், ஹிந்து அறநிலையத் துறையால் மண்டபம் கட்டப்பட்டதாக கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அதில், ஊர் முக்கியஸ்தர்களின் பெயர் போடாததை கண்டித்தும், கோஷம் எழுப்பினர்.பொய்யான கல்வெட்டை அகற்றிவிட்டு, பொதுமக்கள் பெயர் கொண்ட புதிய கல்வெட்டு பதிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

B MAADHAVAN
பிப் 28, 2025 16:12

இப்படித் தாங்க பல கோவில்களில், ஊர் மக்கள் சேர்ந்து தங்களது செலவில் கும்பாபிஷேகம் செய்கிறார்கள். அதற்கு, அனுமதி பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் வேறு கொடுக்க வேண்டி உள்ளது. இவ்வளவு செலவு செய்து நன்கு முடிக்கப்பட்டால், பத்திரிகையில் நாத்திக வியாதி பெயரும், அறங்கெட்டதுறை அதிகாரி பெயரும் போட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அறநிலையத்துறை தங்களது செலவில் செய்தது போல் கணக்கு காட்டிக்கொள்கிறார்கள். யார் கணக்கு சரி பார்ப்பது. வெப்சைட் - வலைத்தளத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ளும் விதமாக, வெளிப்படையாக எல்லா விவரங்களும் குறிப்பிடப் பட வேண்டும். ஊழல் மலிந்து கிடக்கிறது. கோவில் பணத்தை எடுத்துக் கொண்டு, தங்கள் உற்றார், உறவினர், கட்சிக்காரர் இவர்களுக்கு வேலை கொடுக்கும் வேலை வாய்ப்பு நிறுவனமாகத் தான் ஆலயங்கள் திகழ்கின்றன. கோவிலில் இருந்து வரக்கூடிய வருமானம் முழுமையாக கோவிலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. எத்தனையோ கோவில்கள் சொத்துக்கள் இருந்தும், ஒழுங்காக பராமரிக்கப்படாமல், அரசு உதவி கிடைக்காமல் தவிக்கின்றன. ஆனால் அரசின் உதவித்தொகை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வருவாயில் இருந்து ஒரு பகுதி மசூதிக்கும் சர்ச்சுகள் பராமரிப்பு செலவுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவது வேதனையாக உள்ளது. இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்


ஆரூர் ரங்
பிப் 28, 2025 12:02

ஆலயத்துக்கு வராத ஸ்டாலின் புகழ்பாட பக்தர்கள் பணம்? சனாதனத்தை அழிப்பேன் எனக் கூறி அசிங்கப்படுத்தி வரும் உதயநிதியின் பெயர் ஆலய கல்வெட்டில் இடம் பெறுவதை அவர் விரும்புகிறாரா?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை