உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தகர தடுப்பு வெட்டி பெண் பரிதாப பலி

தகர தடுப்பு வெட்டி பெண் பரிதாப பலி

தரமணி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு, 35, இவரது மனைவி ரேணுகா, 30. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சென்னை, கொட்டிவாக்கத்தில் வசிக்கின்றனர்.விஷ்ணு, தனியார் நிறுவன காவலாளி. ரேணுகா, தரமணி 100 அடி சாலையில் உள்ள டி.எல்.எப்., நிறுவன துாய்மை பணியாளர்.நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, மழையுடன் பலத்த காற்று வீசியது. வளாகத்தின் ஓரத்தில் கிடந்த இரண்டு தகர தடுப்புகள் பெயர்ந்து, காற்றில் பறந்து வந்து, ரேணுகாவின் வயிறு, இடுப்பு எலும்பில் வெட்டியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.அங்கிருந்த ஊழியர்கள் ரேணுகாவை மீட்டு, '102' ஆம்புலன்ஸ் வாயிலாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவல் அறிந்த தரமணி போலீசார், அவரின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை