உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு

ஆவடி, ஆவடி --- அண்ணனுார் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று மதியம், 35 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தடயங்களை சேகரித்தனர். அப்போது, 700 மீட்டர் துாரத்தில், 45 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆண் சடலம் கிடந்தது.இருவரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவரும், தண்டவாளத்தை கடக்கும் போது, விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ