உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சாலையில் சுற்றி திரிந்த 17 மாடுகள் பிடிபட்டன

 சாலையில் சுற்றி திரிந்த 17 மாடுகள் பிடிபட்டன

குன்றத்துார்: குன்றத்துார் அருகே கோவூர் ஊராட்சியில் உள்ள சாலைகளில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. அவற்றை பிடித்து, மாடுகளை பாதுகாக்கும் கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவையடுத்து, கோவூர் ஊராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 17 மாடுகள், நேற்று பிடிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை