| ADDED : டிச 30, 2025 04:59 AM
சென்னை: ரயில்வே யார்டு மேம்பாட்டு பணி காரணமாக, இரண்டு மின்சார ரயில்களின் சேவை இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை: எழும்பூர் - விழுப்புரம் தடத்தில் உள்ள ஒலக்கூர் ரயில்வே யார்டில், இன்றும், நாளையும் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில், தொழுப்பேடு வரை மட்டுமே இயக்கப்படும் விழுப்புரம் - சென்னை கடற்கரை மதியம் 1:40 மணி ரயில், தொழுப்பேடில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.