மர்ம பெட்டிகளில் 28 கிலோ கஞ்சா கண்டெடுப்பு
சென்னை:சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நான்காவது மற்றும் ஐந்தாவது நடைமேடையில் நேற்று, கேட்பாரற்று இரண்டு பெட்டிகள் இருந்தன. அவற்றை, ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அதில், 5.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 28 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இப்பெட்டிகளை, பூக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.